Posts

திரமிளன் கவிதை

Image
        நாட்டு மக்களே வறுமையில் நாலாயிரம் கோடி ரூபாய் பெருமையில் நரேந்திரனின் ஒருமையில் நாசமானது அவர் கை மையில் அலுவலகங்களுக்கு விடுப்பு அரை வேலைப்பாடோடு முடிப்பு சங்கிகள் சாப்பாட்டில் இல்லை உவர்ப்பு - சொல்லுகிறேன் ஆர்.எஸ்.எஸ் சிறப்பு பேதம் வளர்க்கப் பெரும் பெரும் புராணங்கள் சாதிச் சண்டை வளர்க்கத் தக்க இதிகாசங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்  இந்நாட்டிலே காவிக் கொடி ஏற்றினர் திருச்சபை மேட்டிலே குதிரை யாகத்தில் பிறந்தவனுக்கு குடமுழுக்கு சிறப்பு குடியரசுத் தலைவருக்கு  அனுமதி மறுப்பு  அம்பானி அதானி அழைப்பு  ஆலயங்கள் ஓர் நாள் துடைப்பு இது அத்தனையும் ஓர் நடிப்பு ஜஹாங்கிர் வந்தார்  ஓவியம் வளர்ந்தது ஷாஜகான் வந்தார் கட்டடக்கலை சிறந்தது ஔரங்கசீப் வந்தார் ஒற்றுமை பிறந்தது இராமன் வந்தான்  சந்தேகம் பரந்தது,  கலகம் பிறந்தது. இறுதியாக சொல்லுகிறேன், சமாதி ஒன்று இடிப்பு மதம் ஒன்று திணிப்பு சாமானியனுக்கு மறுப்பு  இதுவே “இராமர் கோயில் திறப்பு” - திரமிளன்

கேலியல்ல வன்மம்

Image
கேலியல்ல வன்மம்   இந்த வார விகடனில் -அதிரூபன் இந்த வார விகடனில் …       ‘ஒரு பிரிவு, ஒரு அணைப்பு, ஒரு ஆற்றாமை, ஒரு குளத்தாமை, ஒரு ஏக்கம், ஒரு ஏப்பம், ஒரு தும்மல், ஒரு காதல், ஒரு இச்சை, ஒரு பச்சை என மனித அகமெனும் மிதிவண்டியின் பல்சக்கரம் போல் இரவில் கச்சிதமாகப் பொருந்திச் சுழலும் தனிமையின் கொடூர கணங்களை வார்த்தையெனும் மைதா மாவில் புரட்டி, கொதிக்கும் மனமெனும் வாணலியில் பொரித்து விளையாடுபவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன்…. _____________      இப்படி மனுஷ்யபுத்திரனை வெகுஜன வாசக வட்டத்திற்கு அறிமுகப்படுத்துகிறது 'ஆனந்த விகடன்' …      வைரமுத்துவின் 'மகா கவிதை' நூல் பெரிதாக வெளியிடும் சமயத்தில், வைரமுத்து vs கவுண்டமணி என கவிதை எழுதினார்கள்.      சமீபத்தில் நகுலனின் காணொளி ஒன்று இலக்கிய உலகத்தில் பரவலாக பகிரப்பட்டு, நகுலனுக்கென்று தனியாக நூல் வெளிவந்த சமயத்தில் நகுலனின் கவிதைகளையும் கிண்டல் செய்து இதேபோல் எழுதினார்கள்.     இப்போது மனுஷ்யபுத்திரனின் 50வது நூல் வெளியான சமயத்திலும் இப்படிப்பட்ட கவிதைகளை எழுதி இழிவு செய்கிறார்கள். ...

மாயோன் தொழில் - ஆர்.கே.சுரேஷ் லலிதன்

Image
  மாயோன் தொழில் -ஆர்.கே. சுரேஷ் லலிதன் 1) மூன்று சதுரக் கள்ளிப் பாதையில், ஐந்து தப்படியில் அகட்டி பனங்காய் மயில , வளைத்துப் போர்த்தான் மேய்ப்பன் ......... ஏலே !!! சேக்காளி வல்லத்தான் காட்டில் திருப்பு, கடைந்த தொசிலி போல் பனி புல்லும் ,புதுப்புல்லும், மானியாத்து படுவையில் மணக்கிறதாம் கறவை உருப்புடி மேய்வதை கரையும் பறவை  கணக்கெடுக்குமாம் குருதி வெளிச்சத்தில் கொலை மட்டுமல்ல கணக்கெடுப்பும் காட்டின் பொழுதுபோக்கு தான்....... 2) காட்டோடையில் கானல் நீர் கரையை கரைக்கும் தருணம் வறட்சிப் பகுதியில் ஓட்டை  தூக்கிக் கொண்டு    நகர்ந்தன நத்தைகள் மேய்ப்பன் கைத்தடியை இறுகப் பிடித்தான்........ கள்ளிப் பாதையில்  பார்வையைக் கூர்மைபடுத்தினான், காட்டின் குளிர்ச்சியை அளந்தது வியர்வைப் பூத்த அவன் உறுப்புகள்........ 3) வியர்வைப் பூத்த அவன் உறுப்புகளின் கவிச்சையை, முகர்வதை  தவிர்த்தான்......   மூச்சுக்காற்றைத் தவிர வேறு  எந்த சத்தமும் இல்லை கைத்தடியின் துணையோடு அந்த கொழுத்த ஊர்வனையை  நோக்கி ஊர்ந்தான்  அவன் செயலை  சித்திரப்படுத்தத் தொடங்கியது , கருவேலி மர...

உந்துதலுக்கான மூல விசை -வேலாயுதம் பொன்னுசாமி

Image
  உந்துதலுக்கான மூல விசை                   -வேலாயுதம் பொன்னுசாமி      எந்த ஒரு நபரும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும்போது, அவர் அந்நியத் தன்மையை உணர்கிறார். சமூகப் படிநிலையில் பல வாழ்க்கை முறைகளைக் கொண்ட மக்கள் தங்களுக்கான ஒரு பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் இதனை ஒரு கூட்டுப் பண்பாடு என்றும், இந்த கூட்டுப் பண்பாடு ஒரு வாழ்வியல் உந்து சக்தியாகவும் , தங்கள் வாழ்வியல் விருப்பங்களைக் கோரும் “போல செய்தல்" நிகழ்வுகளாகவும் வெளிப்படுவதாக அவதானிக்கிறார். விவசாயப் பண்பாட்டில் அதிக விளைச்சல் வேண்டி அதனை பாவனையாக minitic dance செய்வதை இதற்கு உதாரணமாக குறிப்பிடுகிறார். பெரும் மதங்கள் கர்மா தான் உன்னை ஆட்டி வைக்கிறது. உனது இன்ப துன்பங்களுக்கு காரணம் கர்மா தான். இந்த கர்மா உன்னை தொடர்ந்து கொண்டே இருக்கும், எனவே பிறவிகள் தொடர்வதை தடுக்க முக்தியை நோக்கி  வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது. ஆனால் சிறு தெய்வ வழிபாட்டு மரபை ஆதிமனித மனநிலையின் தொடர்ச்சியைக் கொண்டதாக அறி...

சீமைச்சாமந்தி - கவி கோ பிரியதர்ஷினி

சீமைச்சாமந்தி  பெருங்கலயத்தின் விளிம்புகளில் நக்கி நக்கி நஞ்சுண்டேன்; காமப்பந்துகளை அறுத்து அண்ணீரகத்தின்  வெதுவெதுப்பில் முக்கி எடுத்தேன்! உப்பரிகையில் நின்றிருந்த கூகைச்சேவல் பெட்டைக் கோழியின் அல்குல் அரிந்தெடுக்க நாற்புரமும் அலையாடித் திரிந்தது மீட்பை பெறும் முன்பே நக்கித் தீர்ந்திட வேண்டும். அல்குல் கழற்றி நெருப்பில் சுட்டெறித்தேன் அரிவதற்கு அல்குல் இல்லாமல் போனபின்பும் நஞ்சுண்டேன் நஞ்சுண்டேன்! நக்கித் திமிர்ந்தபின்னும் சேலாப்பழமாய் சதைக்கனிக்குள் கிண்டி நிமிரும் பூலோகப் பாதையின் நடுவே சீமைச்சாமந்தியின் அல்குல் திருடுபவர்களே... போம்.... போம்... பூட்டூசி வேண்டாம் பூட்டூசி வேண்டாம்...                          -கவி கோ பிரியதர்ஷினி 

அரா கவிதைகள்

  அரா கவிதைகள்  இரவின் சப்தம் தாங்கிய இருட்டில் நித்திரையில் தோன்றிய விசித்திரக் கவிதை விழிக்கையில் காணாமல் போனது அதில் வார்த்தைகள் இல்லை எழுத்துகள் இல்லை அழுகையின் கோர ஒலியும் கண்ணீர்த் துளிகளுமே இருந்தது.. நினைத்துப் பார்த்தால் -அது கவிதையாகவே இல்லை.. நல்லவேளை -அது காணாமல் போனது.. ******** பிய்ந்த செருப்பின் பிளவுக்கு நடுவே வீசிய நறுமணம் அந்த பூவுக்குரியது செருப்பிடம் செய்யும்  பூவின் வாதம் நான் உன்னை நறுமணமாக்கவில்லை என்பதே எத்தனையோ முறை  தேய்க்கப்பட்டும் வாய் கிழிய பேசிய செருப்பைச் சுற்றி மௌனம் மட்டுமே  எஞ்சியுள்ளது பின்னணியில் என்னுடையது இல்லையென சொல்லிய பூவின் வாசத்தோடு ******* அருகில் வந்து  என் இதழை உன்னில் மோத விடும் பெருத்த ஆசை குலுக்கிய பீர் போல பொங்கிற்று. கை கோர்த்து அத்தகிப்பின் வியர்வையில் சற்றுநேரம் மனதை அசைய விடாமல் நின்றிட  உடனடியான ஏக்கம் உன்னருகில் நானிருக்கும் போது நீ ஏதேதோ பேசிடினும் உன்னால்  தட்டச்சிடப்பட்ட வாக்கியங்களுக்கு ஓசை பிறந்து  காதுக்குள் ஒலித்து இம்சிக்கிறது எவ்வளவு நேரம்  இம்சையைப் பொறுத்துக் கொள்வது உடை...

சத்யா (தொடர்கதை) - விசித்திரன்

  சத்யா                                    -விசித்திரன் அத்தியாயம் 2      சத்யா தன்னையொரு கேளிக்கைப் பொருளாகவே மாற்றி வாழப் பழகி விட்டான். அதற்கு அவனுடைய உருவமும் துணை புரிந்தது. மற்றவர்களைக் காட்டிலும் ஒல்லியான தேகம் மற்றும் கருத்த நிறம் இது போதாதா? நகைக்கக்கூடியப் பொருளாக இந்த சமூகத்தில் மாற்றப்பட,. அவன் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களில் இவனே சற்று உயரம் என்றாலும், பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாணவர்கள் சேர்ந்தாலும் சரி பழையவர்கள் வெளியேறினாலும் சரி “ஹைட் ஆடர்ல நில்லுங்க” என்ற பீ. டி சார் சொல்ல சத்யாவே முதலிடம் வகிப்பான்.காலங்கள் மாறினாலும் இவனுடைய இடத்தில் வேறொருவர் வருவதேயில்லை. இதனால் உருவக்கேலி என்பது சத்யாவுக்கு பழகிப்போன ஒன்றாகும். இதுமட்டுமல்ல அரசின் சலுகை சார்ந்த படிவங்களில் புகைப்படம் இல்லாமல் வரும் போது சத்யா என்று பார்த்தவுடன் பெண் என்று இரண்டு மூன்று முறை தவறுதலாக வந்துள்ளது. இது அவனை மேலும் பேசு பொருளாக மாற்றியது. இதற்கு முதற் காரணம் அவன் பெற்றோர் தான் ஐந்தாம் ...

எடுத்தாளப்பட்ட பகுதி

எடுத்தாளப்பட்ட பகுதி    கடவுளின் பிரதிநிதி - புதுமைப்பித்தன்  ஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க் காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி.  இந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள்.  இரு ஜாதியருடைய நிலையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்.  சேரிப் பட்டினிகளுக்கு அக்ரஹாரம் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம். மணிக்கொடி, 25.11.1934.

கூதிர் பருவம் -1 (சனவரி -2024)

Image
  தொகுப்பாசிரியர் பகுதி எழுதுவதை தள்ளிப் போடாதீர்கள். எண்ணங்கள் விரிவடைய எழுதுங்கள். எழுதுவதற்கு பெரிய தாளைத் தேர்ந்தெடுப்பது நலம்.                                                  -ஜெ.மோகன் ஆர்வத்தின் விளைவே கூதிர் மின்னிதழ். ஆர்வத்திற்குத் தீனி போடும் விதமாக தங்களது ஆக்கங்களை அனுப்பிய தோழமைகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். இதழ் எப்படியானதாக இருக்கிறது என்பதை வாசிப்பவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்துவது குறைகளை களைந்து தொடர்ந்து பயணிக்க பெரும் வாய்ப்பாக அமையும். ஏதோ இயன்றதைச் செய்கிறோம். இந்த பணியில் இதழின் இறுதி பகுதியில் இடம்பெற்றுள்ள பாரதியின் ‘தராசு’ பகுதி வாசகம் தனிப்பட்ட முறையில் என்னைத் தொடர்ந்து உந்தித் தள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து இதழ் வெளிவருவதற்கு கூட்டுழைப்பும் வாசகர் பரவலும் மிக முக்கியம். காலம் அதனைத் தீர்மானிக்கட்டும். படைப்புகளை அனுப்பியவர்களுக்கு நியாயம் சேர்க்கும் முகமாகவே இந்த முதல் இதழ் சனவரி 1ல் வெளியாகிறது.       ...

தராசு -பாரதியார்

  எடுத்தாளப்பட்ட பகுதி தராசு        தொடங்கு முன்னே எந்த முயற்சியும் கை கூடுமா கூடாதா என்று ஜோதிஷம் பார்ப்பதிலே பயனில்லை; தொடங்கி நடத்தினால் பிறகு தெரியும். - பாரதியார்