மெய் முறிந்தால் மெய் ( எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்) ( சந்திப்பு: ரா. அழகுராஜ் , ஜெ. மோகன் , ஆ. கிரண்குமார் , , ச. தணிகைவேலன் , த. சத்தியப் பிரியா, ர. பிரகாஷ்ராஜ் ) ரா. அழகுராஜ்: நீலம் என்ற வண்ணம் தொடக்கத்திலிருந்து உங்கள் எழுத்துகளில் வருகிறது அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா ? கடல் நீலம் , வானம் நீலம் , கடவுள் நீலம் கடவுளுக்கு நிகரான மீட்பர் அம்பேத்கர் நீலம். நீலம் என்பது தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிறமாக உள்ளது. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நாளைக் கொண்டாட நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி சென்றிருந்தேன். அங்கு ஓரடி அல்லது முழங்கை அளவு நீள மார்பளவு சிலை எங்கு பார்த்தாலும் இருந்தன. அந்தச் சிலைகளும் நீல நிறத்தில் இருந்தன. அந்தச் சிலைகள் அம்பேத்கர் போல இல்லை. அவற்றை எப்படி அம்பேத்கர் என்கிறீர்கள் என்று கேட்டால் அவை நீலமாக இருப்பதால் அம்பேத்கர் என்றார்கள். கடல் தொடங்கி வானம் , கடவுள் , அம்பேத்கர் வரை ஒடுக்க...
அரா கவிதைகள் பற்றுப்புள்ளிகளில் பொருத்தப்பட்ட மரக் கைப்பிடிகள் பிடித்து ஓட்டைகளுக்குள் கால் வைத்து மேலேறுகிறேன் ஆங்காங்கே விடைத்து நிற்கும் கைப்பிடிகளும் குழிந்து கிடக்கும் பொந்துகளுமாக அச்சுவர் பரந்து கிடக்கிறது ஒவ்வொரு நாளும் விடாமல் ஏறுவது தொழிலாகிவிட்டது புண்களிலிருந்து உலர்ந்து உதிரும் பக்குகளை உருட்டி துளைகளை அடைப்பதற்கு மயிரிழை வெற்றி கோப்பையாக கைகளுக்கு வரலாம் உடைந்து போன முகத்தின் மேல் முனைகள் அறுக்கின்றன பச்சை பூசிய மயிர்களைத் திண்ணும் ஆடு மாடுகளின் தொண்டைக் குழிக்குள் வெடுக்கென விழும் அழுக்குச்சட்டைகளுக்குள் ஒரு மனித உடல் விழுங்கப்பட கம்மிய குரலில் புத்தோசையில் மெட்டுக்கேற்ற கதைப்பாடல் ஒன்று பிறக்கிறது பிறப்பின் உற்சவத்தை கைப்பிடியைப் பிடித்து தொங்கி கண் மூடி உள்ளிழுத்து ரசிப்பவர்கள் நாளையிலிருந்து மீண்டும் மேலேற வேண்டும் ***** மிக சாவகாசமாக இடுப்புக்கு மேல் போடும் உன் கைகளைச் சுற்றி இழுத்துவிடும் இயந்திரத்தின் மூர்க்கமான மூக்குக்குள்...
Comments
Post a Comment