மெய் முறிந்தால் மெய் ( எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்) ( சந்திப்பு: ரா. அழகுராஜ் , ஜெ. மோகன் , ஆ. கிரண்குமார் , , ச. தணிகைவேலன் , த. சத்தியப் பிரியா, ர. பிரகாஷ்ராஜ் ) ரா. அழகுராஜ்: நீலம் என்ற வண்ணம் தொடக்கத்திலிருந்து உங்கள் எழுத்துகளில் வருகிறது அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா ? கடல் நீலம் , வானம் நீலம் , கடவுள் நீலம் கடவுளுக்கு நிகரான மீட்பர் அம்பேத்கர் நீலம். நீலம் என்பது தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிறமாக உள்ளது. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நாளைக் கொண்டாட நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி சென்றிருந்தேன். அங்கு ஓரடி அல்லது முழங்கை அளவு நீள மார்பளவு சிலை எங்கு பார்த்தாலும் இருந்தன. அந்தச் சிலைகளும் நீல நிறத்தில் இருந்தன. அந்தச் சிலைகள் அம்பேத்கர் போல இல்லை. அவற்றை எப்படி அம்பேத்கர் என்கிறீர்கள் என்று கேட்டால் அவை நீலமாக இருப்பதால் அம்பேத்கர் என்றார்கள். கடல் தொடங்கி வானம் , கடவுள் , அம்பேத்கர் வரை ஒடுக்க...
நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு . நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல் சந்திப்பு: ரா. அழகுராஜ் , ச. தணிகைவேலன் , இர. பிரகாஷ்ராஜ் ரா. அழகுராஜ்: நாடகம் , நடிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள் ? நான் ‘ கருஞ்சுழி ’ நாடகத்தை 2001 ல் பார்த்தேன். அப்போது , நாடகம் தொடர்பான எந்தவொரு அறிமுகமும் எனக்கு இல்லை. ஒரு பார்வையாளராக , அந்த நாடகம் எனக்குள்ளே ஒரு பாதிப்பை உருவாக்கியது. எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியதென தெளிவான பதில் இல்லை. நான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பின் , அந்த நாடகத்தில் நடிப்பு தான் என்னை பாதிப்புக்குள்ளாக்கியது என்ற தெளிவான பதில் கிடைத்தது. இப்போது , நடிப்பு என்பதில் இருக்கும் கற்பனைகள் தான் என்னைத் தொடர்ந்து நாடகத்தில் இயங்கவைக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். அந்த நாடகத்தில் நடித்தவர்கள் என்னைப் போன்ற பார்வையாளர்களை கவர்ந்திழுக்கவே நடித்தார்களா ? புதிதாக நாடகத்திற்குள் வருபவர்களையும் இள...
காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி குருகு இணைய இதழில் எழுதப்பட்டுள்ள கிறிஸ்துவின் சித்திரங்கள் கட்டுரைத் தொடர் தெய்வீக அம்சம், துயரமும் மறைஞானமும், உடலும் ரத்தமும், உலகப்போர்கள் என்ற நான்கு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாமரைக்கண்ணன் அவிநாசி எழுதிய இத்தொடர் முழுமையாக இணையத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.. கிறிஸ்துவின் ஓவியங்களைப் பற்றிய இத்தொடர் ஓவியங்களை கிறிஸ்தவர்கள் எப்படியாக பார்த்தார்கள் என்பதிலிருந்து தொடங்குகிறது. மோசேயின் காலத்தில் சிற்பங்களையும் சிலைகளையும் எகிப்தியர் முதலான பிற இனத்தவர்கள் வணங்கியபோதும் கூட உருவமற்ற வழிபாட்டையே ஆபிரகாமின் வழியில் அவரது வம்சாவழியினர் கைக்கொண்டனர். இவையெல்லாம் பிற்கால கிறிஸ்தவத்திற்குரிய தோற்றுவாய் என்பதால் அவற்றையும் கணக்கில் கொண்டே ஓவியம் முதலான கலைகள் கிறிஸ்தவ பின்புலத்தில் செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல குறியீடுகள் தான் ஓவியத்திற்கும் எழுத்திற்கும் அடிப்படை. உருவ வழிபாடற்ற பின்னணியைக் கிறிஸ்தவம் கைக்கொண்டதால் கிறிஸ்துவின் ஓவியங்கள்...
Comments
Post a Comment