Posts

குடியானவரின் பாகப் பிரிவினை பேசும் "நாகம்மாள்" - த. சத்தியப்பிரியா

Image
  குடியானவரின் பாகப் பிரிவினை பேசும் "நாகம்மாள்" - த. சத்தியப்பிரியா      1939ல் கு.ப.ரா.வின் ஊக்கத்தினால் ஆர். சண்முகசுந்தரம் இளைஞராக இருந்த காலத்தில் (1942) எழுதி வெளியான குறுநாவலே ‘நாகம்மாள்’. க.நா.சு, சுந்தர ராமசாமி போன்ற பலராலும் இந்நாவல் பாராட்டப் பெற்றுள்ளது. அன்றைய கால கோயம்புத்தூரில் (இன்றைய கரூர், நாமக்கல்) கதை நடக்கிறது. குடியானவர்களின் வாழ்க்கையில் நிகழும் சொத்து தகராறை கதை மையமாகக் கொண்டுள்ளது.‌      கதை நாயகியான நாகம்மாள் தன் கணவன் இறந்த பிறகு கணவனின் தம்பியான சின்னப்பன் மற்றும் அவனது மனைவி ராமாயியுடன் வசித்து வருகிறாள். அவளை யாரைக் கண்டும் அஞ்சாத யார் என்ன பேசினாலும் கண்டு கொள்ளாத பெண்ணாக ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார். சிவியார்பாளையத்து பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கூட நாகம்மாளிடம் பேச்சு கொடுக்க அச்சப்படுகிறார்கள். இதற்கு நேர் மாறாக ராமாயி மிகவும் சாதுவான வீண் பேச்சு பேசாத விதரணை உடைய பெண்ணாக இருக்கிறாள். அவ்வப்போது குடும்பத்தில் நாகம்மாள், ராமாயிக்கு சச்சரவு தோன்றிய போதும் குடும்பம் சீராகவே இயங்கி வருகிறது. இக்குடும்பத்தின் ஆதாரம...

துவக்குகளின் மினுப்பான "இன்னும் வராத சேதி” -அழகுராஜ் ராமமூர்த்தி

Image
      துவக்குகளின் மினுப்பான "இன்னும் வராத சேதி”  -அழகுராஜ் ராமமூர்த்தி     1980களில் தமிழ் இலக்கியத்தின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. புதுப்புது கொள்கைகள் மற்றும் எழுத்து முறைகளை தங்கள் எழுத்தில் மேற்கொள்ள ஆரம்பித்தனர். திறனாய்வும் பெருகியது. இது தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் உலகளவிலும் நடந்திருக்கிறது. இதன் சாட்சியாகவே கா. சிவத்தம்பி, எம். ஏ. நுஃமான் போன்ற அறிஞர்களின் கட்டுரைகள் இருக்கின்றன. அவர்களது கட்டுரைகளில் இடம்பெறும் சுட்டுதல்கள் வாயிலாக இலக்கியத்தில் நிகழ்ந்த மாற்றம் தொடர்பான செய்திகளை அறிந்திட முடியும். இலங்கையில் கவிதை எழுதத் தொடங்கிய பெண்கள் இயக்கம் குறித்த செய்தியை “இன்னும் வராத சேதி” என்ற ஊர்வசியின் கவிதை நூலில் இடம் பெற்ற பின்னட்டை குறிப்பின் வாயிலாக எம். ஏ. நுஃமான் அறிய தருகிறார். அதில் “1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பெயர் அலையாக எழுச்சி பெற்றது” என குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி ஒரு வரலாற்றுத் தகவல்‌. அந்த இயக்கத்தில் ஒருவராக இருந்த ஊர்வசியின் முதல் கவித...

கூட்டைத் துறந்த நத்தை - ஜெ. காமாட்சி காயத்ரி

Image
கூட்டைத் துறந்த நத்தை - ஜெ. காமாட்சி காயத்ரி       “உலகின் பல்வேறு நாடுகளில் பிறந்த கவிஞர்கள், பண்பாட்டின் அரசியலை, தத்துவத்தை, வாழ்வியலைத் தம் மொழியில் செதுக்கியிருக்கின்றனர்.  இப்படியான கவிஞர்கள் மொழிபெயர்ப்பு வாயிலாக உலகின் மூலைமுடுக்கெங்கும் வாசிக்கப்படுகின்றனர். இவர்களின் தாக்கம் உலகத்தை அதிரச்செய்கிறது.     இப்படியான கவிகளில் சிலர் என் வீட்டின் சன்னலைத் திறந்து வெளிச்சமாகவும், காற்றாகவும் நிரம்பினர். கடல் தாண்டி என் வீடு வந்து என் கால்களை நனைத்த அலைகள் அவை. இத்தொடர் உலகக் கவிதை என்ற பேரியக்கத்தின் ஒரு பகுதியைப் பற்றிய எனது புரிதல். உலகளாவிய கவிமனத்தை அறிதலுக்கான எனது தேடல்” என்ற முன்குறிப்போடு இந்தத் தொடரை இன்பா தொடங்குகிறார். கடல் தாண்டி அவர் கால்களைக் கவிதைகள் நனைத்தது போல் ‘கடல் தாண்டிய சொற்கள்’ என்ற தொடர் கவிஞர்களையும், கவிதைகளையும் கடல், காற்று, நிலம் தாண்டி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. மற்ற புனைவு இலக்கியங்களை விட கவிதைகளே நுண்ணுணர்வுகளை மிக நுட்பமாக படம் பிடித்துக் காட்டும். தினமும் வாழ்ந்து கொண்டிருக்கும் எதார்த்த வாழ்வில் இருந்து தப்ப...

தவம்- ச. தேவிகா

                            தவம்- ச. தேவிகா        நான் இப்ப எப்பிடி இருக்கேன்னு தெரியுமா? என் ஒடம்பெல்லாம் நக,வெல ஒசந்த பட்டுப் பொடவ பாக்க அப்புடியே மகாராணியப்போல இருக்கேன். பாவம் எல்லாரும் நானு செத்துப்போயிட்டேன்னு அழுதுகிட்டே இருக்காங்க. ஆனா நானு அவங்க கூட ஒக்கார்ந்து அவங்களத்தான் பாத்துட்டு இருக்கேன்னு அவங்களுக்கே தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் மகாராணி மாதிரி இருக்குறதுக்கு என் மொத புள்ள தவமணி தான் காரணம். எனக்கு மொத்தம் மூனு புள்ளைங்க. என் மொத புள்ள தான் தவமணி. எம்புள்ள தவமணி ரெம்ப அழகா இருப்பான். ரெண்டாவது ஒரு மகன், மூனாவதா ஒரு பொம்பளப்புள்ள. இவ்வளவுதான் எங்க குடும்பம். தவமணிய நாங்க பன்னெண்டாவது வர படிக்க வச்சோம்.அவன் பத்தாவது படிக்கும் போது எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் ஒடம்புக்கு முடியாம போய்ருச்சு, படுத்த படுக்கையா கெடந்தோம். தவமணியோட படிப்பையும் எங்களால நிறுத்த முடியல. அப்ப அவன் தம்பி சமயன் எட்டாவதுதான் படிச்சிட்டு இருந்தபுள்ள, அதனால அவன மட்டும் பள்ளிக்கொடம் போகாம நிறுத்துனோம். அவன்...

முறைசாரா குப்பை சேகரிப்போர் -ப.அமர்நாத்

Image
  முறைசாரா குப்பை சேகரிப்போர் -ப.அமர்நாத்      நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகில் நுகர்வு கலாச்சாரம்  ஆண்டுக்கு ஆண்டு  அதிகரித்து வருகிறது.  கடந்த  10 ஆண்டுகளில்  தனிநபர் நுகர்வு மிகவும் அதிகரித்துள்ளது.  இது அதிக  கழிவுகள் உருவாக வழிவகுக்கிறது, அதிலும் குறிப்பாக மறுசுழற்சி கழிவுகள் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. அதேசமயம் கழிவு மேலாண்மைத் துறையின் வளர்ச்சியும்‌ அதற்கு ஏற்றார் போல  வேகமாக இல்லை.  தெருக்கள், சாலைகள், சந்திப்புகள், ஆற்றங்கரைகள் மற்றும்  பல இடங்களில்  சட்ட விரோதமாக  குப்பைகள் மறுசுழற்சி கழிவுகளோடு சேர்த்து கொட்டப்படுகின்றன. இதனால் பூமிக்கு உண்டாகும் பாதிப்பை  அறிவதற்குகூட பொதுமக்கள் தயாராக இல்லை எ‌ன்பதே ஆபத்தான உண்மை.       மிகவும் பாதிக்கப்பட்ட சமூகமான முறை சாராத  குப்பை பொறுக்குபவர்களின் பங்களிப்பு காரணமாகவே திடக்கழிவு  மேலாண்மைத் துறை   ஓரளவு தப்பிப் பிழைக்கிறது. கழிவு மேலாண்மையில் இவர்களின் பங்களிப்பு மகத்தானது. இவர்கள் ...

தீனன் கவிதைகள்

  தீனன் கவிதைகள் சாலையைக் கடக்கும் கிழவிக்கு  கைபிடித்துதவ ஒருவருமில்லை வெடிமருந்துகளில் தீ உரச  அவளின் தள்ளாட்டங்கொண்ட கையெலும்புகள் பொருத்தமாய் இருக்கலாம்  பிரசவ வலியில் கூச்சலிடும் கர்ப்பிணியின் வாய்க்குள்  அழுக்குத் துணியொன்றை திணித்தபடி வன்புணரும்  மருத்துவமனை ஐனக்கூட்டம்  செல்ஃபிக்கு அழைக்கிறது கோணித்துணியில் முகம் மறைத்து அறுபது டிகிரி தீக்காயங்களோடு  உடல் நோக நடந்து வந்த  குருட்டுச் சிறுவன்  தெரு நடுவே மண்டியிட்டு  தன் பாலினத்தை அறிவித்தான்  சுவர்க்கிறுக்கல் ஓவியத்தின்  படர்க்கைக் கோடுகளினால்  ஞாபகத்தை மீட்டெடுத்த  தொண்டுக் கிழவர்  ஒற்றைக் காலில் நொண்டியடித்து  ஹேன்ட் பேக் சுமந்த யுவதிமீது எச்சிலுமிழ்ந்து  ஐ லவ் யூ சொன்னார்  சொற்களுக்கிடையே இடைவெளி விடுவதால்  பொறுமையிழந்த மாணவன் ஒருவன்  நிறுத்தற்குறிகளால் பைத்தியமான தமிழாசிரியன் மேல்  திராவகம் ஊற்றினான் கலிங்கத்துப்பரணி பேய்களனைத்தும்  புத்தகத்தினின்று விடுதலை பெற்று  தலைகீழாக வகுப்பறைச் சுவர்களில்  ...

வெறுப்பு வாடை -ம.வீ.கனிமொழி

  வெறுப்பு வாடை -ம.வீ.கனிமொழி அந்திவானம் போல  குழம்புகிறது நெஞ்சம்  விண்மீன்களின் வரவிற்காக காத்திருக்கும் நிலவு போல ஒற்றைச் சொல்லிற்காக காத்திருக்கிறது வானம் சிதறிய செவித் துண்டுகளில் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது அவள் குழந்தையின் அழுகுரல் தெறித்து விழுந்த  அவள் மார்பகங்களின் குருதி அப்பிஞ்சின் பசியைத் தீர்க்க பாய்கிறது போர் நிறுத்தம் தேவையெனக் கதறுகின்றன அந்நிலத்தின் மரங்கள் வீசப்பட்ட சதைகளின் திசுக்களை  நக்கிக் கொண்டிருக்கும் காற்றில் வெறுப்பு வாடை https://www.instagram.com/p/DJk_XYlSB4h/?igsh=YzljYTk1ODg3Zg==

கூதிர் இதழ் அறிமுகம் - மெய்ப்பொருள் வண்ணம் கலை இலக்கியப் பள்ளி

Image
        கூதிர் இதழ் பற்றிய அறிமுகக் கூட்டம் மெய்ப்பொருள் கலை இலக்கியப் பள்ளி மூலம் தொழிலாளர் நாளான இன்று புதுவைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பாலகத்தின் அருகிலிருக்கும் தொல்காப்பியர் புல்வெளியில் நடைபெற்றது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ல. பிரபாகரன் மற்றும் இரா. வீரமணி ஆகியோர் முறையே கூதிர் பருவம் ஒன்று முதல் ஐந்து வரை ஆறு முதல் பத்து வரை அறிமுகப்படுத்திப் பேசினர்.       இதழின் உள்ளடக்கங்களைப் பகுத்தும் அறிமுகம் செய்தனர். இதழில் பங்களித்தவர்களின் நிழற்பட பதிவு இல்லாதது, அதிகப்படியான புனைப்பெயர் பயன்பாடு உள்ளிட்ட சில ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் குறைகளையும் சுட்டிக்காட்டினர். இதழ் எப்படியாக 2024ல் நடந்து இலக்கிய மற்றும் சமூக நிகழ்வுகளின் பதிவுகளாக அமையப்பெற்றுள்ளது என்பதைக் கட்டுரைகள் மற்றும் கவிதைகளைச் சுட்டிக் காட்டி உரையாற்றினார்கள்.      புதிதாக வருபவர்களுடைய ஆக்கங்கள் இதழில் இடம்பெற்றதும் இதழுக்கு அனுப்பி இடம்பெறாத பகுதிகள் குறித்தும் உரையாடல் சென்றது. நான்கு பேர் ஒன்றிணைந்து இதழ்ப்பணியில் ஈடுபடுவதில் உள்ள கருத்து முரண்கள் முதலான செ...

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு

Image
  கூதிர் இதழ்களுக்கான இணைப்பு கூதிர் பருவம் 1 கூதிர் பருவம் 2 கூதிர் பருவம் 3 கூதிர் பருவம் 4 கூதிர் பருவம் 5 கூதிர் பருவம் 6 கூதிர் பருவம் 7 கூதிர் பருவம் 8 கூதிர் பருவம் 9 கூதிர் பருவம் 10 புலனம் மூலம் தொடர்வதற்கான இணைப்பு https://whatsapp.com/channel/0029VaF4s3JLY6cyKudoAb0R படவரி பக்கம் https://www.instagram.com/koothirmagazine_2024?igsh=YzljYTk1ODg3Zg== முகநூல் பக்கம்  https://www.facebook.com/profile.php?id=61554987526965

தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) -ப. பட்டி திவ்யா

  தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) - ப. பட்டி திவ்யா       உடைந்த கூடு(நஸ்தானிர்ஹ்) என்ற குறுநாவல் 1901ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூ ரால் எழுதப்பட்ட வங்க மொழி நாவல் ஆகும் . 1800 களின் இறுதி என்பது வங்க மறு ம லர்ச் சி காலகட்டமாகும் . இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தி ன் தொடக்கம் என்றும் கூறலாம் .     மனம் அதை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதான தல்ல. அ வ்வளவு சுவையானது ; சுகமானது . அதை மொழிவ ழி அறிந்து உணரலாம் . ஆழ்மனமொழி யை   அறிவின் பகுத்தறிவின் துணை கொண்டு நோக்க வேண்டும்.    நாவலில் சாருவிடம் ஏற்பட்ட மன மாற்றத்தை அவள் கணவன் பூபதி நுண்ணிய மனமொழியறிவு கொண்டு பார்க்க முற்படுதல் வேண்டுமாய் தா கூர் தன் மொழிவ ழி முனைந்துள்ளார் .    மேல் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த வ ங்காள அறிவுஜீவி பூபதி . உயிர் மூச்சாக தீவிரத்துடன் அரசியல் ப த்திரிகை ஒன்றினை நடத்தி வருபவர் . சதா எந்நேரமும் அவருக்கு தன் வேலை மட்டுமே முக்கியம் . சுதந்திரம் கிடைத்து எல்லோரும் நல்வாழ்க்கை வாழ தன் பத்திரிக்கை எழுச்சி கொ ள்ள செய்யுமானால் அ...