குடியானவரின் பாகப் பிரிவினை பேசும் "நாகம்மாள்" - த. சத்தியப்பிரியா
குடியானவரின் பாகப் பிரிவினை பேசும் "நாகம்மாள்" - த. சத்தியப்பிரியா 1939ல் கு.ப.ரா.வின் ஊக்கத்தினால் ஆர். சண்முகசுந்தரம் இளைஞராக இருந்த காலத்தில் (1942) எழுதி வெளியான குறுநாவலே ‘நாகம்மாள்’. க.நா.சு, சுந்தர ராமசாமி போன்ற பலராலும் இந்நாவல் பாராட்டப் பெற்றுள்ளது. அன்றைய கால கோயம்புத்தூரில் (இன்றைய கரூர், நாமக்கல்) கதை நடக்கிறது. குடியானவர்களின் வாழ்க்கையில் நிகழும் சொத்து தகராறை கதை மையமாகக் கொண்டுள்ளது. கதை நாயகியான நாகம்மாள் தன் கணவன் இறந்த பிறகு கணவனின் தம்பியான சின்னப்பன் மற்றும் அவனது மனைவி ராமாயியுடன் வசித்து வருகிறாள். அவளை யாரைக் கண்டும் அஞ்சாத யார் என்ன பேசினாலும் கண்டு கொள்ளாத பெண்ணாக ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார். சிவியார்பாளையத்து பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கூட நாகம்மாளிடம் பேச்சு கொடுக்க அச்சப்படுகிறார்கள். இதற்கு நேர் மாறாக ராமாயி மிகவும் சாதுவான வீண் பேச்சு பேசாத விதரணை உடைய பெண்ணாக இருக்கிறாள். அவ்வப்போது குடும்பத்தில் நாகம்மாள், ராமாயிக்கு சச்சரவு தோன்றிய போதும் குடும்பம் சீராகவே இயங்கி வருகிறது. இக்குடும்பத்தின் ஆதாரம...