கூதிர் பருவம் -5, மே-2024
கூதிர் பருவம் -5, மே-2024 தொகுப்பாசிரியர் பகுதி இந்த மாத இதழில் பட்டினியில் நாள்தோறும் செத்து மடியும் மக்களை நினைவில் கொள்ளாமல் கல்லுக்குள் உறங்க நேரம் ஒதுக்கி வழிபாடு செய்யும் ஆட்சி அதிகாரத்தை அப்பட்டமாக்கும் ஆல்யன் கவிதைகளோடு சின்ன சின்ன சிந்தனைகளை அழகியலோடு பரிமாற்றும் அகிலா சுப்பரமணியின் கவிதைகளும் அதனோடு அரா கவிதைகள் மற்றும் மாற்று அணுகல் முறையிலான விசித்திரனின் சிரஞ்சீவி கதையும் இடம்பெற்றுள்ளது. வரலாற்றை மாற்றி எழுதுவோம் எனக் கொக்கரிக்கும் கூட்டத்திற்கு குறியீட்டு முறையில் வலிமையான எதிர்வினை கொடுப்பதாக வல்லிசை நாவல் எப்படி இருக்கிறது என்பதை வரலாற்று தகவல்களுடனும் அசுரன் படத்தின் இறுதிக்காட்சியில் தனுஷ் பேசும் வசனத்தை நினைவுபடுத்தும் வகையிலான கல்வி பற்றிய காட்சிகளையும் ஒடுக்கப்படுதலுக்கு காரணமாக பறை இருக்கிறதென பறையெதிர்ப்பை பட்டியலின கூட்டமைப்பு முன்னெடுத்துச் சென்றதுமாக விரிவானதொரு கட்டுரையாக அழகுராஜ் ராமமூர்த்தியின் வரலாற்றின் ஒலி வல்லிசை கட்டுரை இந்த இதழில் வெளியாகியுள்ளது. அத்துடன் திராவிடச் சிறைக்குள் இருக்கும் பாரதிதாசன் பொதுவுடைமைக்குள் உலவியதை திரமிளன் கட்ட