அகிலா சுப்பரமணி கவிதைகள்
அகிலா சுப்பரமணியன் கவிதைகள்
இராமனும் இராவணனும்
திரைச்சீலைக்கு பின்னால்
*****
அண்ணாந்திருக்கும் சிறுவர்கள்
கோபுரத்தின் உச்சியில்
கொடுக்காப்புளிகள்
*****
காதலரோ? தெரியவில்லை
பின் தொடர்கின்றன
நடக்கும் கால்கள்
*****
ஊர் விருந்து
உண்ணாமல் கிடக்கிறது
கவுக்கப்பட்ட சொப்புசாமான்
*****
யார் முதலில் பேசுவது
நீயா? நானா?
வென்றது ஈகோ
*****
காலம் காட்டிப் போனது
உன் மீது வைத்த காதலை
கல்லறையின் மேல் பூக்கள்
*****
Comments
Post a Comment