கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024)
கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024) தொகுப்பாசிரியர் பகுதி "சாதிப் பிரிவு சமயப்பிரிவுகளும் நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும், மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே ஓடச் செய்தால் நமையும் ஓடச் செய்வார் என்பேன்" எனும் பாவேந்தரின் வரிகளுக்கேற்ப இந்த மாத இதழில் நம் நாட்டில் திணிக்கப்பட்டு வரும் சமயத்தினை எதிர்த்து ஒரு சாரார் செய்துள்ள செயலினை விமர்சித்து வந்துள்ள கவிதை இந்த இதழின் முக்கியப் பகுதி. அந்தச் செயலின் பின்னணியை சிந்திக்கும் வரலாறு கவிதைக்குள்ளேயே இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. மேலும், ராமராஜ்யம் பற்றிய பல்வேறு கட்டுரைகளின் இணைப்புகளை பார்வைக்கு வைத்துள்ள இரண்டு கவிதைகள் பற்றிய கருத்துகளோடு ஏன் ஒரு மாநிலத்திற்கு மட்டும் சலுகை என்பதை பேசு பொருளாக்கியுள்ள காசி அனுபவக் கட்டுரை, நாட்டுப்புற வழிபாடுகள் மற்றும் சடங்குகளோடு பன்மைக்கு ஆதரவான குரல் எழுப்பும் அனுபவக் கட்டுரை முதலானவை ஒரே நிலையில் நிற்கின்றன. புதுமைப்பித்தன் கதையில் இருந்து சிறு பகுதி இந்த இதழின் எடுத்தாளப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒரு கைம்பெண்ணின் ஏக்கத்தை உணர்ந்த வண்ணத்துப்பூச்சியின் இரக்கத்தை பதிவ