கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024
கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024 தொகுப்பாசிரியர் பகுதி இந்த மாத இதழ் தீனனின் முறுகேறிய மொழியில் வெளிப்பட்டுள்ள கவிதைகளுடன் தொடங்கியுள்ளது. ஜெயதே எழுதியுள்ள டி.கே. டூ டி.எம் கட்டுரை சமகாலப் பொருத்தப்பாட்டிற்கு வரலாற்றை முன்னுதாரணமாகக் கொள்ளும் கட்டுரை ஆகும். டி.கே. பட்டம்மாள் முதல் டி.எம்.கிருஷ்ணன் வரை கர்நாடக இசைக்குள் புதுமை புகும் போதெல்லாம் ஒவ்வொருமுறையும் எப்படியான எதிர்வினைகள் நிகழ்ந்துள்ளன என்கிற சிந்தனைக்குரிய தோற்றுவாயாக ஜெயதேவின் கட்டுரை அமையுமென நம்புகிறோம். பாண்டிச்சேரியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆர்த்தி என்கிற சிறுமியின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட அகிலா சுப்பரமணி எழுதிய கவிதையோடு உளமொழியெனில் என்ற தலைப்பில் தி.கு.இரவிச்சந்திரனின் கட்டுரையில் தொடங்கி படைப்பு மொழிக்கான சான்றை சுந்தரராமசாமியிடமிருந்தும் சமூக மொழிக்கான சான்றை இராசேந்திரச்சோழனிடமிருந்தும் பெற்ற அழகுராஜ் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மொழியின் பலவாறான சிந்தனைகளைத் தொகுத்துக் கூற முற்படும் முயற்சியாக இதனைக் கொள்ளலாம். இராமன் மற்றும் இராவணனை வைத்து தமிழில் நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்