தீனன் கவிதைகள்
தீனன் கவிதைகள் உயிர்ப்பசி இருண்மையின் முட்கள் குதறியெடுத்த புண்களைச் சுமக்கும் குறுகிய மனது நைந்து கிழிந்த பழந்துணிபோல எலும்புக்கும் தோலுக்கும் உயிர்கொடுக்கிறது எரிச்சலை சேமித்து சலிக்கிறதெனக்கு சலனத்திருந்தே பழகிய அசைவுகள் செயலின்மைக்குள் அழுகுவதான கொச்சை எண்ணங்கள் உடல்மேல் ஊரும் புலையான உணர்ச்சிக்குள் விழிகள் விரிக்க திணறலில் இருக்கும் சுகங்களுக்காக சுய இரக்கத்தைப் பிழியும் கற்பனைத் துயரைக் கற்பித்துக்கொள்கிறேன் அழுகையில் அடைக்கும் மூச்சுப் பாதையில் இரைகிற காதுகள் ஒலியினில் நிசப்தித்திருக்க நெற்றியில் துருத்தும் ஒற்றை நரம்பினில் பின்னந்தலையில் துடிக்கும் இதயத்தில் கணுக்கால் விரல்களில் உயிர்ப்பினை நிறுத்தி சுவரினில் தலையினை மோதிக்கொள்ளும் தசையின்பத்தின் உச்சியில் பிதற்றிட ஒரு பிடியவளில் சுருங்கிய உயிரை அசைவுகளின்றி வெறித்துக் கிடந்தேன் உதடுகள் திறந்தே இருக்கும் புரியாமையின் பாவனை தலையை ஒருபுறமாகத் திருகும் பிரம்மையின் வெறியாய் எச்சில் சிந்தும் மூச்சிறைப்ப...