தூக்கம் -க.வருண்குமார்

 

தூக்கம் -க.வருண்குமார்

 

தாலாட்டி கொன்றவர்களோ?

குறியால் கொன்றவர்களோ?

சாதியால் எரித்தவர்களோ?

கொள்ளையடிப்பவனோ?

கொலைகாரனோ?

சமயவாதியோ?

சந்தர்ப்பவாதியோ?

அரசியல் அரக்கனோ?

ஆன்மீக கிறுக்கனோ?

விதைத்து அழுபவனோ?

வதைத்து சிரிப்பவனோ?

உழைப்பவனோ?

சுரண்டுபவனோ?

உணவு விரும்பியோ?

உடை விரும்பியோ?

புத்தனோ?

ஹிட்லரோ?

இல்லவே இல்லை

இந்த எதார்த்த உலகில்

நாங்கள் வேறுபட்டவர்கள்

நாங்கள் தூக்கவாதிகள்..!

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு