முட்டாள் வண்ணத்துப்பூச்சி

 முட்டாள் வண்ணத்துப்பூச்சி

                                                       -கோ.பிரதீபா

காற்றோடு மோதிக் கொண்டிருந்த வெள்ளைத் துணி ஒன்றில் 
இளைப்பாறுவதற்கு அமர்ந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று
 தன் சாயங்களை விட்டுச் சென்றது, 
பார்ப்பவர்களுக்கு முட்டாளாய் தென்பட்டாலும் ,
அந்த வண்ணத்துப்பூச்சிக்குக் கூட தெரிந்திருக்கிறது 
அந்த கைம்பெண்ணின்
வெள்ளைச் சீலையும் வண்ணங்களுக்காக ஏங்குகிறது என்று !

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு