Posts

Showing posts from August, 2025

இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

Image
  இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி       பிரதாபசந்திர விலாசம் தமிழ் நாடக வரலாற்றில் நாடகத்தின் போக்கை மாற்றிய நாடக இலக்கிய வரிசையில் நிற்கத்தக்க படைப்பு. இந்நாடகத்தை திண்டிவனத்தைச் சேர்ந்த ப. வ. இராமசாமி ராஜு எழுதியுள்ளார். இந்திரா பார்த்தசாரதி திண்ணை இதழில் 2006ல் எழுதிய “தமிழின் முதல் இசை நாடகம்” என்ற கட்டுரை பிரதாப சந்திர விலாசம் பற்றிய கவனத்தைத் தமிழ் பரப்பில் கொடுத்தது. அதன்மூலம் 2007ல் இந்நாடகம் ஏனி இந்தியன் பதிப்பகம் மூலம் மறு பதிப்பும் ஆனது. அக்கட்டுரையிலிருந்தே நாமும் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம்.    1871ல் பிரதாபசந்திர விலாசம் எழுதப்பட்டதாக இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார். மேலும் இந்நாடகம் மேடை ஏற்றப்பட்டதா? என்கிற ஐயத்தை முன்வைத்து க.நா.சு தன்னிடம் தனிப்பேச்சில் பகிர்ந்த செய்தியையும் குறிப்பிட்டிருக்கிறார். பம்மல் சம்பந்த முதலியாரின் “நாடக மேடை நினைவுகள்” நூல் இராமசாமி ராஜு மற்றும் பிரதாபசந்திர விலாசம் அரங்கேறிய செய்தியை அறியத் தருகிறது. “காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக காலஞ்சென்ற ராம...

அரா கவிதைகள்

  அரா கவிதைகள்  உன்னிடம் மட்டும் சொல்கிறேன் என் காதலை வேறெவர் கேட்பினும் நான் சொல்வதில்லை உன் மீதான ப்ரியத்தை நீ செத்தாலும் சொல்லமாட்டேன்  நீ செத்ததாலும் சொல்லமாட்டேன் ஏன் சொல்ல வேண்டும்  அது அப்படியே உலவட்டும் உயிர்ப்பலி கேட்கும் சிலைகளைப் போல சொல்லச் சொல்லி சொல்லியிருக்க நினைத்தும் வாய் தவறியும் சொன்னதில்லை நான்கு மாதம் முன் நடமாட முடியாது படுத்திருந்த புலம்பலில் எனக்கு நானே சொன்னதுண்டு எவருக்கும் கேட்காதவாறு நம்மிடையிலான நட்பேறிய காதலை என்னால் அல்ல தானாக நிகழட்டும்  காதலைப் போல கொலையும் முடிவில் உயிர் பறிப்பின் சின்னமாக  மனதளிக்கப்பட்ட சிலுவையின் நீளம் உன்னைவிட இரண்டடி நீண்டது அகலம்  உன்னைவிட நான்கடி அகண்டது ****** எதிரிலுள்ள புற்று மண்ணைத் தின்று வளர்ந்து என்னிடம் வந்த பாம்பின் உடல் முழுக்க விஷம் அசைந்துச் சுற்றி வளையமிட்டு அடிக்கடி பேசியதற்குள்ளும் விஷத்துளிகளின் தெறிப்புகளிருப்பதை புற்றைக் குறித்த என் பேச்சில்  விரைத்து அசைந்த  பாம்பின் நாவுகள் காட்டிக்கொடுத்தன பறந்து பறந்து இல்லையென்றாலும் ஓடிவந்து வக்காலத்து வாங்கும் இரட்டைநாவுகள் தீ...