Posts

Showing posts from June, 2025

எதார்த்த வாழ்வியலிலிருந்து முகிழ்க்கும் புனைவு : ‘குதிப்பி’ புதினத்தை முன்வைத்து - இரா. வீரமணி

  எதார்த்த வாழ்வியலிலிருந்து முகிழ்க்கும் புனைவு : ‘குதிப்பி’ புதினத்தை முன்வைத்து                                                        - இரா. வீரமணி       சமையல் ஒரு கலையாகுமா? சமையல் கலை குறித்த இலக்கியங்கள் தமிழில் பெரிய அளவில் வெளிவந்திருக்கின்றனவா? (‘மடைநூல்’ எனும் சமையல் கலை நூல் இருந்ததாகச் சீவக சிந்தாமணி உரையின் வழி எடுத்துக் காட்டுவார் கே.கே.பிள்ளை. ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்றவை பெயரளவில் மூலிகைப் பொருட்களால் சுட்டப்படும் அறநூல்களே தவிர, உணவுப் பண்பாட்டை விரிவாகப் பேசுவன அல்ல.) பாணர், விறலியர் போன்று சமையல் கலைஞர்களின் வாழ்வியல் எங்கேனும் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியிருக்கிறதா? இப்படியான கேள்விகள் நம்முள் எழுந்திருக்கக்கூடுமா என்பது சந்தேகம்தான். இக்கேள்விகளுக்குத் தமிழ்ச் சூழலில் நெடிய வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. அவ்வரலாற்றைப் பேசும் முன், இவ்வரலாறு பேசப்படும் தருவாயை ஏற்படுத்தியை நூலினைக் குறித்து அறியவேண்டு...

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

Image
  நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு . நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல் சந்திப்பு: ரா. அழகுராஜ் , ச. தணிகைவேலன் , இர. பிரகாஷ்ராஜ்   ரா. அழகுராஜ்: நாடகம் , நடிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள் ?           நான் ‘ கருஞ்சுழி ’ நாடகத்தை 2001 ல் பார்த்தேன். அப்போது ,  நாடகம் தொடர்பான எந்தவொரு அறிமுகமும் எனக்கு இல்லை. ஒரு பார்வையாளராக , அந்த நாடகம் எனக்குள்ளே ஒரு பாதிப்பை உருவாக்கியது. எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியதென தெளிவான பதில் இல்லை. நான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பின் , அந்த நாடகத்தில் நடிப்பு தான் என்னை பாதிப்புக்குள்ளாக்கியது என்ற தெளிவான பதில் கிடைத்தது. இப்போது , நடிப்பு என்பதில் இருக்கும் கற்பனைகள் தான் என்னைத் தொடர்ந்து நாடகத்தில் இயங்கவைக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.        அந்த நாடகத்தில் நடித்தவர்கள் என்னைப் போன்ற பார்வையாளர்களை கவர்ந்திழுக்கவே நடித்தார்களா ? புதிதாக நாடகத்திற்குள் வருபவர்களையும் இள...