Posts

Showing posts from August, 2024

வாசகர் பகுதி

  வாசகர் பகுதி      கூதிர் இணைய இதழ் நான் முறையாக முழுவதுமாக படித்து வரும் இதழாக இருந்து வருகிறது . இதன் முதல் இதழின் முகப்பில் இதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவராகிய மோகன் குறிப்பிட்ட அடிகள் " எழுதுவதை தள்ளிப் போடாதீர்கள் , எண்ணங்கள் விரிவடைய எழுதுங்கள் " என்னும் தொடர் என்னை திரும்பிப் பார்க்க வைத்தது . அத்தொடர் தொடர்ந்து இதில் படைப்புகளை வழங்கி வரும் படைப்பாளர்கள் தொடர வழி வகுத்திருக்கலாம் . குறிப்பாக எனக்கு கவிஞர்களை பற்றி கவிதைகளைப் பற்றி எதுவும் தெரியாது , ஆனால் தினேஷ்குமார் , வேலாயுதம் பொன்னுசாமி , றாம் சந்தோஷ் , திரமிளன் முதலானோர் படைப்புகள் பிடிக்கும் .       அத்தோடு விசித்திரனின் சத்யா தொடர் எனது சிறுவயது நினைவுகளை கிளறுவதாக உள்ளது . குறிப்பாக இரண்டாம் இதழில் சிறுவர்களின் செயல்பாடு எனது பள்ளிப் பருவத்தை நினைவூட்டியது . அழகுராஜ் கட்டுரைகள் பெரும்பாலும் நான் மறுவாசிப்பிற்கு உட்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது . மேலும் , இதழில் வாசகர் பகுதியில் இடம்பெறும் ...

மயிர் விடு தூது -குவிரன்

  மயிர் விடு தூது                                                    - குவிரன் பொலிவுறும்இம் மாபுகழ் உலகின் மீதே நல்அழகுற மடந்தை ‌    யர்கண்ணில் தென்பட மைந்நிறம்போல் தன்னுடல் முழுதும் கொண்டாய் சிந்தே என்இனிய நல்மயிரே நீயே அங்கம் சூழ்நிறைந் தாய்என் றாதலால் நான்உனை மறத்தல்நன் ‌‌ றாகுமோ நின்றிடஞ்சொல் செல்இடம் அனைத்தும் ‌‌ மீகதிர் ஒளிவீச யான்நடந் திரிய நீஅமைந்தாய் வேறொருவர் போற்றிப்பா டத்தான்வேண் டுமோபா ரில்உனை பழிப்பார் என்றிருந்தால் பேதையென யாவரும் இனம்கண்டு கொள்வார் நிச்சயம் சிரமின்றி போனாலும் அத்துயர் நொடிஒன்றே நின்னிழந் தவர்க்கு நித்தம்நித் ‌‌ தம்துயர் மறுப்பார் யாருமிலர் அன்னை அன்றாடக் காத்திட்ட ஆருயிர்அன் பெலாம்நீ ‌   பெற்றிடும் கவனிப்புக் கெல்லாம் எ...