Posts

Showing posts from July, 2024

கூதிர் பருவம் –7 ஜூலை- 2024

Image
   கூதிர்  பருவம் –7   ஜூ லை - 2024 தொகுப்பாசிரியர் பகுதி               ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் வரவேண்டிய   கூதிர் ஏழாவது இதழ் மாத இறுதியில் வெளியாகிறது.   இவ்விதழில் திருநங்கையர், சிறுகதைகள், கவிதை, திரைப்படம், சிற்றிலக்கிய முன்னுரை என பல்வேறு வகைப்பட்ட கட்டுரைகளோடு தொடர்கதை மற்றும் கவிதைகளும் வெளியாகிறது.     புதுவை பகுதியைச் சார்ந்த திருநங்கைகளுடன் நிகழ்த்திய உரையாடலின் விளைவாக எழுதப்பட்ட பரசுராமனின் கட்டுரை, சாகித்ய அகாதமியின் 2024ஆம் ஆண்டு   யுவ புரஸ்கார் பட்டியலில் இடம்பெற்ற   கவிதை நூல்களை பற்றிய பதிவு, கூதிர் ஐந்தாம் இதழில் வெளியான பிரபஞ்சனின் ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ சிறுகதை தொடர்பான வாசக அனுபவம் வெளியானது. அதன் தொடர்ச்சியாகவே கோ.வெங்கடாசலத்தின் ‘யார் தான் பாவம் இல்லை’ கட்டுரை இவ்விதழில் வெளியாகிறது. கல்விப்புலம் மற்றும் மாணவர் மனநிலை, கிறிஸ்தவத் தொன்மம் ஆகியவற்றை முன் வைக்கக்கூடிய கட்டுரை இவ்விதழுக்கு வலு சேர்க்கிறது. மேலும் மதில் திரைப்படம் பார்த்த அனுபவம், மயிர் விடு...

நானும் மயிரை விட்டேன் -அரம்பன்

நானும் மயிரை விட்டேன் - அரம்பன்         தமிழில் பிரிவு காலத்தில் துயரையும் உணர்ச்சிப் பெருக்கையும் பாடி அனுப்பும் தகைமையை பதிவு செய்யும் இலக்கிய வகையாக தூது இலக்கியங்கள் இருந்தன . தூது மூலம் பெறப்படும் செய்தி அகம் அல்லது புறம் என எத்தன்மை வாய்ந்ததாக காணப்படினும் அதனைப் பெறுபவர் வெளிப்படுத்தும் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தவல்லது . தமிழில் தூது இலக்கியத்திற்கென ஒரு வரலாறு உண்டு , அஃறிணைப் பொருட்களும் உயர்திணையினரும் தூது சென்றதை சங்கப் பாடல்களிலும் பிற்கால சிற்றிலக்கிய வகையான தூது இலக்கியத்திலும் காணலாம் . அந்த வரிசையில் வரும் ஒரு படைப்பாகவே குவிரனின் மயிர் விடு தூது எனும் தற்காலத்திய சிற்றிலக்கிய படைப்பைக் காண வேண்டியுள்ளது . மரபு இலக்கியத்தின் வலிமை அதன் சொல்லாட்சியில் உண்டு எனலாம் . யாப்பிற்காகவே சொற்களை உருவாக்கிய வரலாறு தமிழுக்கு இருப்பதாகவே நான் கருதுகிறேன் . குவிரன் இந்த படைப்பில் தனக்குள் இருக்கும் மரபிலக்கியச் சொற்களை எளிமையாக சேர்த்து இலக்கியம் படைத்துள்ளார் ....